வியாழன், 21 பிப்ரவரி, 2013

                  தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
-------------------------------------------------------------------------------------
    >>  இது யாரையும்  புண்படுத்த என்னாத ,
       புண் பட்டவனின்  ( கற்பனை ). <<<
------------------------------
-------------------------------------------------------
  சீருடை  அணிந்த   சிறப்புக் கொள்ளையர்
அவர்  வாழ்வில் ,
 காக்கியும் , வெள்ளையும்   கலந்த  கும்மாளம்
அதெற்கென ,
சிவப்புக்  கோட்டையில்   செதுக்கி சிம்மாசனம் 
அங்கேநடப்பது ,
  ஆயுள் முழுதும்  அதிகாரப்  பிச்சை !
அதை செயலாக்க ,
  கடைத் தெருவெல்லாம்     கப்பம்   வசூல் 
இந்த ,  அலுவலுக் கென ,
புதுக் காரிலும் ,வேனிலும்  கடமை  ஊர்வலம் !
  வெள்ளைத் துணிகளின்  வெகுஜனக் கரைகள் , 
சொல்லைக்கேட்டு  சுறு சுறுப்பாகி !
கொள்ளை   என்ற  கொள்கைக்காக , இல்லை
வரம்புஇவர்களுக்கென்றும் !
தினமும்  தேரும் ,எக்கச் சக்க  எச்சைத் தீனி
அதை    உண்டு   பெறுவார் , 
ஓர்  ஆயிரம்   சாபம் !  அதனால் ,
வயிறு முட்ட  வளர்ந்திடாதோ  வஞ்சப்  புற்று ?
இப்படி    சந்தி  சிரிக்க,   தன் சந்ததி  சிறக்க ,

     சேர்த்து  வைத்த     செல்வம்    தானே ,
தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
    இவர்   தா னன்றோ   சீருடையணிந்த 
சிறப்புக் கொள்ளையர்.....!!!

>>> இவன் : பிறைத்தமிழன் <<< 
==============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக