வியாழன், 19 மே, 2011

முகம் தெரியா முதிர் கன்னிகள் !

" எளிமை நிறுத்தி "


செல்வந்தன் இல்லத்திருமணம்

ஏழைக்  குமர்களுக்கு  
எதிராக  விடுக்கப்பட்ட 
போர்ப்  பிரகடனம் !
 
இந்த   யுத்தத்தில்   
இன்னும்   ஏராளமான  ,

முகம்    தெரியா ,
முதிர்   கன்னிகள்  !
 
மூவாறு   வருடங்கள் , 
முத்தாய்   வளர்த்த   மகளை ,
 
முந்தானால்   வந்தவன்    
கொத்தாய்   அள்ளி   செல்ல ,
 
பத்தாய்   சில   லட்சங்களும்,  
பகட்டாய்   பல   ஆபரணங்களும்...!.
 
என்ன   கொடுமை..
ஏன்  இந்த   மடமை ?

பணத்தையும் ,  
பகட்டையும்   நேசிப்பவன்,  

செல்வத்தையும்   செருக்கயுமே ,
செல்ல  மகளுக்கு  
சீதனமாய்    தருவான்  !

இளைஞனே   விற்க்கப்படுகிறாய்..  
இதற்க்கு   நீ   வெட்கப்பட வில்லையா  ?
 
இறுதியில்   இட்டு  செல்வது  ஒன்றுமில்லை..
நீ   விட்டு  செல்பவை .. யாவும்   உனதில்லை  !
 
ஆழங்களை   அழகாய்  படைத்தவன்,
பெண்ணினத்தின்   பெருமையினை ,
சொல்ல    வில்லையா ?
 
இறைவன்   படைத்த    உயிரனம்,
இல்லறம்   காணும்போது .. 
பிறவியின்  பயனை   அடைகிறது !
 
ஒரு   மனிதன்   முழுமை  பெறுவதற்கு , 
பெண்    தேவை !
 
அந்த  பெண்ணை   பெருமைப்படுத்த , 
பொருள்   தந்து  மணம்  கொள் !
 
அவள்   உன்  வலக்கரங்களுக்கு  சொந்தமாவாள் ! 
இல்லையேல்.. 
இயற்கையின்  இலக்கணங்களுக்கு  நீ  எதிராவாய்  !

கருணை   மிக்க   சமூகமே ,
களங்க மற்ற  சமுதாயத்தை   உருவாக்கும் !

எனவே      மானிடனே.. !!  
எளிமையை    நிறுத்தி ..
வறுமையை    துரத்தி..
இளமையின்  வாழ்வை   இனிதே  ஏற்ப்பாயாக........!!!
========================================

                                                   இவன் >>   > பிறைத்தமிழன்

ஞாயிறு, 15 மே, 2011

மாற்றம் ஒன்றே மாறாதது



















                      ஆராம்விரல் 



மாற்றம்  மட்டுமே  மாறாதது
 

நடந்து  முடிந்த  2011 ஆம்  ஆண்டின்  தமிழகத்திற்கான
பொதுத்  தேர்தல்
 

புதிய அரசுக்கு பிறைத்தமிழனின் வாழ்த்துக்கள் 


தமிழகத்தின்   வாக்காளர்கள்   தமிழகத்தை  
யார்  ஆட்சி  செய்ய  வேண்டும்  என்பதில்  கொண்டுள்ள
அக்கறையை   காட்டிலும்
யாருக்கு  வாக்களிக்க  கூடாது  என்பதில்  கொண்ட  உறுதியே
பெருவாரியான  மக்களை  வெளியே  வந்து  வாக்களிக்கச்  செய்தது

தி மு க தோற்றதால்  
அ தி மு க  வெற்றி  பெற்றிருக்கிறது  அது  சரித்திரம்  வாய்ந்த
வெற்றி  பெறுவதற்கான  சாதனைகள்  துளியும்
நினைவில்  இல்லாத  போதும்  கூட
அவர்கள்  கைகளில்  மிகப்பெரும்  வெற்றியை   தரப்பட்டிருக்கிறது

சாதனைகளை   சவாலாக  நிகழ்த்தி  சர்வ  சாமானிய

மக்களையும்  சென்றடைய  செய்த  அரசு   தி மு க வின் அரசு
சாதனையின்  பலன்களை  ரசித்து , ருசித்தவர்களும்  கூட

தி மு க வின்  சூரிய  சின்னத்தை   சுட்டிக் காட்ட
சூளுரைத்து  விரித்த  விரல்களால்  சுருக்கி  மடக்கி 
சுலபமாய்  குத்தினார்கள்  " முதுகில் " என்றே சொல்லலாம்
இது  எதனால் . ஏன் ,எப்படி ,எதற்கு ,ஆம்

மாற்றம்   மட்டுமே   மாறாதது   இம்முறை
மாற்றத்திற்கான   காரணத்தை   சரியாக
உணர்ந்திருப்பதாகவே   தோன்றுகிறது 

விரிக்கப்பட்ட  ஐந்து  விரல்களுக்கு  எதிராக
விமர்ச்சித்து  விரிவாக  விளம்பரப்  படுத்தப் பட்ட
விளங்கிக் கொள்ள  வேண்டிய  ஐந்து  விஷயம்

1 ,   ஸ்பெக்ட்ரம்  2 G அலைக்கற்றை  விகாரம்
2 ,  தமிழக  மீனவர்கள்  மீது  இலங்கை  நடத்தும் 
இரக்கமற்ற  அத்துமீறல் 
3 , ஜீரணிக்க  முடியாத  தமிழகம்  தழுவிய  மின்  வெட்டு
4 ,ஒத்த  ரூபாய்  அரிசியை  மாதமொரு  முறை   நுகர்வோரை  விட
மத்த  ரூபாய்  அரிசிகளின்    கடும்  விலை  உயர்வை  ஒவ்வொரு  நாளும்  
நுகர்கின்ற   அடித்தட்டு  மக்கள்  முதல்
நடுத்தர  மற்றும்  மேல்  மட்ட  வரையிலான  மக்களே  அதிகம்  என்பதை
ஆட்சியாளர்   நினைவில்  கொள்ளாதது

5 உழவர்  சந்தைக்குள்  அடங்காத  உலகமய  மாக்கப்பட்ட
ஊசி நூல் முதல் உயிர் காக்கும்  மருந்து வரை
உயிர்க்கொல்லி விஷம் போல் உயர்ந்துவிட்ட   விலைவாசி

{ உதாரணம் தங்கமும் ,பெட்ரோலும் கூட }
இதன்  விலை  உயர்வில்  மாநில  அரசுக்கு  என்ன  பாங்கு  என்பதை
உணரக்கூடிய  பொது  மக்களின்  பொது  அறிவுக் குறை

தமிழகத்தில்  ஐந்து வருடத்துக்கு முன்  அ தி மு க ஆட்சியில் 
விலைவாசிகள்  இப்படி ஏறினது இல்லை இந்த
கருணாநிதி ஆட்சியிலே அநியாய விலை என்று அங்கலாய்க்கும்
பாமர ,சாமானிய ,நடுத்தர வர்க்கத்தினர் கொண்ட உறுதியே ஆட்சி
மாற்றத்தை செயல்படுத்தியது


ஓரளவு  கட்டுப்படுத்தலாமே  தவிர  விலைவாசி  உயர்வு  என்பது
தவிர்க்க  முடியாதது  காலத்தின்  கட்டாயம்  ஓரளவு  என்ற

இதன்  ஏற்றத்தால்வுகளை  மக்கள்  ஏற்றுக்கொள்ளும் விதமாய்
பிரச்சனைகளை  அனுகத்தவறிய  அரசின்  மெத்தனம் மறுப்பதற்கு இல்லை
இனி எப்போதும் போல் நபிக்கையோடு ஐந்து ஆண்டுகள்
தி மு க  காத்திருப்பது சற்று சிரமமே ஏன் என்றால் புதிதாக
அரசியல் தொழிலை தொடங்கிய இளஞர்கள் இந்த ஐந்து ஆண்டு
இடைவெளியை   பயன்ப்டுத்த்க்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது



அத்தகைய  வாய்ப்புகளை  அ தி மு க  சுலபமாக  உருவாக்கித்தரும்
என்பதில்  சிறிதும்  ஐயம்  இல்லை  ஏன்  என்றால்  கடந்த கால அ தி மு க
செயல்  பாடுகள்  நிரூபித்  திருக்கிறது

நடுரோட்டில்  பிச்சை  எடுப்பவன்  கூட  நான் ஆளும்  கட்சிக்காரன்
என்று  சொல்லி  உயர்  அரசு  அதிகாரிகளையும்  எளிதாக  மிரட்ட  முடியும்
ஆட்சியாளர்களால் அரசு அதிகாரிகளும்  அசுரத்தனமாய் பந்தாடப்படுவார்கள்
இது போன்ற காரணங்களால்

ஆட்சியை விரும்பாதவர்கள் கூட சில நிர்பந்தங்களால்
ஆளும் கட்சி போர்வையில் உலவுவார்கள் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி
அப்போது அணிகள் மாறும் ஆட்சியையும் மாறலாம் அங்கே
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது புரிதலாகும்

====================================================================
                               இவன் >>    >> பிறைத்தமிழன்