சென்னை வீதிகளில் தண்ணி தெளிக்கும் லாரிகள் !
அதன் பின்னே எழுதப்பட்ட சில பொன்னான வரிகள் !
குடிநீரை சேமிப்போம் ,
குறையின்றி நீர்பெருவோம் !
பொன்மொழிக்குக் கீழே ,
புரிந்தும் புரியா புது விளக்கம் !
இதோ :~
சிதைந்து தொங்கும் ,
சிறிய , பெரிய நீர் திறக்கும் குழாய்கள் !
சாலையெங்கும் சிந்திச் சீரழியும் ,
சென்னைக் குடிநீர் !
இப்படிக்கு :~
சிறிதும் சொரணையின்றி லாரியின் ஓட்டுனர் ,
மற்றும் :~
சிரிக்கத் தெரியாத சிடு மூஞ்சி ( கிளீனர் ) உதவியாளர் !
வட்ட ,வட்டம் வாக்களித்து ,
வக்கனையாய் பேசுவோரும் !
எமனை கண்டது போல் ,
எங்கும் திரும்பா கடிவாள குதிரைகள் !
ஏன் ? என்ற கேள்வியை
ஏனோ தொலைத்து விட்ட,
எலும்பில்லா நாக்குகள் !
மயிர்நீத்தும் உயிர் வாழும் ,
மாற்றத்தை விரும்புகின்ற
மானமுள்ள மனிதர்கள் !
மோதத் தான் முடியுமோ ,
முறை கேட்ட வாகனத்தில் !
------------------------------
இவன் :~ >>> பிறைத்தமிழன் ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக